Sunday, March 25, 2018

ஆலயமாய் நீ!

புனித வாரத்தின் திங்கள் - 26.03. 2018


நேற்று எருசலேமில் நுழைந்த இயேசு இன்று ஆலயம் செல்கிறார்... உள்ள தவறுகளை கண்டு வெகுண்டெழுகிறார்... தூய்மை படுத்துகிறார். அவர் இன்று நமக்கு தரும் பாடம் என்ன? அவரோடு பயணத்தை நேற்று தொடங்கிய நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன?

இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள், மூன்று நாளிலே இதை நான் எழுப்புவேன் என்று கூறியபோது தன்னை பற்றியே கிறிஸ்து பேசினார், இன்று இந்த ஆலயத்தை தூய்மை படுத்தும் அவர், ஆலயமாம் நம்மை தூய்மை படுத்திக்கொள்ள அழைக்கிறார்.

நாம் இறைவன் வாழும் ஆலயங்கள் என்பதை உணர்ந்திருக்கிறோமா? இந்த ஆலயம் தூய்மைப் படுத்தப்படவேண்டும் என்று விழைகிறோமா? இதோ இந்த புனித  வாரம் நமக்கு துணை புரிகிறது... எங்கிருந்து தொடங்கவேண்டும் என்று சிந்திக்கும் நமக்கு, உன்னிலிருந்து தொடங்கு என்று அறிவுறுத்துகிறது.

ஆலயமாம் என்னை நான் தூய்மைப்படுத்துவேன் என்ற முடிவோடு இந்த வாரத்தில் நுழைவோம்...




No comments: