Friday, April 27, 2018

ஏப்ரல் 27: அவரது மக்களாக சில வழிகள்

5. உள்ளம் கலங்காதீர்கள் 


அவரது மக்களாய் வாழ கிறிஸ்து கற்று தரும் அடுத்த வழி: நீங்கள் உள்ளம் கலங்காதீர்கள். 

கிறிஸ்துவே நமக்கு அளிக்கபட்ட வாக்கு, அவரே அதன் நிறைவு; அவரே வழி அவரே நாம் சென்றடைய வேண்டிய இலக்கு; அவரே உண்மை, அவரே வாழ்வின் உண்மையான பொருள். அவரை நாம் கொண்டிருக்கும்போது நமக்கேதும் குறையேது? அவரை நாம் கொண்டிராவிடில் நமக்கு நிறைவளிப்பது எது? குழப்பங்களும், சோதனைகளும் வரும்போது நாம் கலங்கினோம் என்றால், அவரது உடனிருப்பை நாம் மறக்கிறோம் என்று பொருள். எதை கண்டும் நான் அஞ்சிடேன் - ஏனெனில் உண்மையை நான் அறிவேன், உண்மை வழி என் கண் முன்னே உள்ளது, என் வாழ்வு என் கையில் உள்ளது, ஏனெனில் என் ஆண்டவர் என்னோடு உள்ளார்! 

எதை கண்டும் நான் அஞ்ச தேவை இல்லை, ஏனெனில் அவரறியாது எதுவும் நடப்பது இயலாது - என் ஆற்றலுக்கு மீறிய சோதனையும் என்னை அணுகாது. அவரில் நான் ஊன்றி வாழும்போது என் வாழ்வே அவருக்கு சான்றாகி மிளிர்கின்றது...சான்றாய் மாறாது வாழும் எந்த வாழ்வும் கிறிஸ்தவ வாழ்வாய் இராது. கலங்காதிருப்போம், அவர் மக்களாவோம், நம்மில் அவரை பூரிப்படைய செய்வோம்!

No comments: