Thursday, May 10, 2018

மே 11: மகிழ்ச்சி...

நீங்காத மகிழ்ச்சியின் ஊற்று எது?

தி.ப. 18: 9-18; யோ 16: 20-23

உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கி விடமுடியாது... எப்போது? நம் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும் போது. அழியும் பொருட்களிலும், மறந்து போகும் அனுபவங்களிலும் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி அந்த பொருட்களோடு அழிந்துபோகும்; அந்த அனுபவங்களோடு மறைந்து போகும். ஆனால் இறைவனில் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியோ என்றும் அழியாது, என்றும் மறையாது ஏனெனில் அவர் அழியாதவர், மாறாதவர். 

உண்மையாள நீங்காத மகிழ்ச்சியின் ஊற்று இறைவனின் பிரசன்னம்... அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன் என்று பவுலடிகளாரிடம் இறைவன் கூறும் அந்த வார்த்தைகள்...நம்மிடமே பேசப்படுகின்றன... இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையில் நமது மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் போது அது மாறாது, மறையாது, அழியாது நீங்காது. 

No comments: