Wednesday, February 14, 2018

பிப்ரவரி 15: வாழ்வையே தேர்ந்துக்கொள்ளுங்கள்

தவக்காலம் 2018: வாழ்வா சாவா? நன்மையா தீமையா?

இதோ உங்கள் முன் வாழ்வையும் சாவையும் வைக்கிறேன், நன்மையையும் தீமையையும் முன் வைக்கிறேன் ... எதை நீங்கள் தேர்ந்துக்கொள்வீர்கள் என்பது உங்களை பொறுத்ததே! வாழ்வை தேர்ந்துக்கொள்வது வாழ்வின் இறைவனை தேர்ந்துகொள்ளவதாகும். ஆனால் வாழ்வின் சுகங்களையும், தேவைகளையும் முன்னிலைப்படுத்தும் போது வாழ்வின் இறைவனை மறந்துவிடும் அபாயம் இருப்பதை நாம் உணரவேண்டும். இன்று உலகில் நாம் காணும் நிலை இதுவே.   

வாழ்வை தேர்ந்துக்கொள்வது என்பது பெரும் காரியங்களில் மட்டுமல்ல... சின்னஞ்சிறு நிகழ்வுகளிலும், நமது சொற்களிலும், சிறு செயலகளிலும், அன்றாடம் எடுக்கும் முடிவுகளிலும், உள்மன சிந்தனைகளிலும், நாம் முன்னிறுத்தும் முக்கியத்துவங்களிலும் அடங்கியுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இன்று உலகம் தேடிச்செல்லும் பரிமாணங்களை பார்த்தால் நாம் தேர்ந்துகொள்ளவது வாழ்வையா சாவையா என்ற வினா விஞ்சி நிற்கின்றது. பொருளும் பகட்டும், புகழும் பிறர் சொல்லும், சுற்றியுள்ளோரின் கண்ணோட்டமும் உலகத்தின் போக்கும் முக்கியமாக தோன்றும் போது நமது தேர்வு உண்மையிலேயே வாழ்வா சாவா என்று சிந்திக்க வேண்டியுள்ளது!

வாழ்வையே தேர்ந்துக்கொள்வோம்... வெளிபூச்ச்சுகளிலும் வெளியலங்காரங்களிலும், வெளித்தோற்றங்களிலும், அடுத்தவரின் கன்னூட்டங்களிலும் நம்மையே இழக்காது - வாழ்வையே தேர்ந்துக்கொள்வோம்!


No comments: