Sunday, April 22, 2018

Can there be discrimination in the Church?

Ways to belong to the Flock: Accepting Everyone

Monday, 4th week in Eastertide
23rd April, 2018: Acts 11: 1-8; Jn 10: 11-18

The Son of God decided that he will lay his life down for us, for the entire humanity, for every one whom God has created in God's own image and likeness! 

We have just celebrated the Shepherd Sunday: and this week the Word begins to speak to us of the Ways to belong to that Flock, to God's flock. And the first of it is to accept everyone, absolutely everyone, without discrimination!

Can anyone segregate some, on the basis of whatever be the reason, and speak in terms of one being excluded from God's purview, or in terms of being more acceptable or less acceptable in the eyes of God than the others...who can hinder God from loving God's own children and from showing them God's mercy? 

Any logic of seclusion, segregation, stratification...think of them in our context: churches closed in the name of caste, churches divided in the name of language, churches still working on the logic of rich and poor, haves and have nots, powerful and the ordinary...can these define the flock of the Lord?

There is nothing that can hinder us from belonging to the flock of the Lord...there is nothing that can hinder God showering God's love an care on us - only one thing can hinder us: our choices, our personal choices for or against God and belonging to God. Condemnation, Discrimination, Condescension - are all mindsets that are un-Christian. Obedience, Surrender and loving submission to God are traits of a child of God! 

ஏப்ரல் 23: அவரது மக்களாக சில வழிகள்

1. அனைவரையும் ஒன்றென கருதுங்கள் 

நமக்காக தன்  உயிரையே தர முன்வந்தார் இறைமகன்: யாருக்காக? நமக்காக... ஒருசிலருக்காக அல்ல... நம் அனைவருக்காக. 

இறைவனை நல்லாயனாய் கொண்டாடிய ஞாயிறை தொடர்ந்து வரும் இந்த வாரத்திலே... இந்த ஒரே ஆயனின் மந்தைகளாக, ஒரே இறைவனின் மக்களாக நமக்கு ஒரு சில நிபந்தனைகளை முன் வைக்கிறது இறைவார்த்தை... நம் அனைவருக்காக இறைமகன் மரித்தார் என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும்... ஏற்றுவிட்டோமே என்று நினைக்காதீர்கள்...

எல்லா இறைசமூகங்களும் ஏற்று விட்டனவா? இறைவனின் மகன் மகள் என பெயர் கூறி கொள்ளும் அனைவரும் ஏற்றுவிட்டோமா? சாதியின் பெயரால் மூடி கிடக்கும் ஆலயங்கள், மொழியின் பெயரால் பிரிந்து கிடக்கும் இறைசமூகங்கள், இன்னும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகளோடே  சென்றுகொண்டிருக்கும் பங்குகள், பணம்பெற்றவர்கள் இல்லாதவர்கள், பதவியில் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள், பெரும் புள்ளிகள் சாமானியர்கள்... என்றெல்லாம் நமக்குள்ளே இன்னும் எண்ணங்கள் இருக்கின்றனவா இல்லையா? 

அவ்வாறு இருந்தால் நாம் இன்னும் அந்த ஒரே ஆயனின் மந்தையாக மாறவில்லை என்று பொருள்... ஒரே இறைவனின் மக்களாக நாம் மாறவேண்டும் என்றால், அனைவரையும் ஒன்றென கருதும் மனப்பான்மை நம்மில் வளரவேண்டும். 

அனைவரையும் சகோதர சகோதரிகளாக காணாத ஒருவர், ஒரே தந்தையும் தாயுமான இறைவனின் மகனாய் மகளாய் மாற முடியாது... நிறை வாழ்வு பெற இயலாது... நாம் நிறைவாழ்வு பெறவே கிறிஸ்து வந்தார் என்பதை உணர்வோம், அனைவரையும் ஒன்றென ஏற்போம். 


Saturday, April 21, 2018

Here is my SHEPHERD


Saves, Summons and Sends...

4TH SUNDAY OF EASTER 

22nd APRIL 2018: THE SHEPHERD SUNDAY
Acts 4: 8-12; 1 Jn 3:1-2; Jn 10:11-18


Imagine it in real: can sheep become the shepherd? Sheep are sheep, and the Shepherd is a human being - thinks, plans, acts, helps and serves! Can sheep truly become shepherd? That is what the Lord invites us to... that is what our Shepherd invites us to... from Sheep to become Shepherd! And with God nothing is impossible!

The Fourth Sunday of Easter is celebrated as the Shepherd Sunday and in the Universal Church, this day is suggested to be celebrated as Vocation Sunday - just to remind us of the transformation that we are called to in our life. 

Here is our Shepherd... who Saves us, Summons us  and Sends us...

He saved us... ready to give up his life, ready to totally surrender himself to God, his Father! We have been saved, when blood of the lamb was strewn the wood that was planted between the heaven and the earth. The sheep had already become the Shepherd, laying his life down for the Sheep...that is our Shepherd, identified by the Father himself and given to us, for our salvation! Do we recognise and acknowledge what the Shepherd has really done for us?

He summons us... the Shepherd summons us, that we come to him and be saved, he bids us that we may come to him drink from his life giving streams, he invites us that we may come to him and become the children of God, yes that is what we are made by that sacrifice and our belief in that sacrifice: for to those who believed in him and accepted him, he gave the power to become children of God (Jn 1:12). In our daily life and situations, do we hear this call coming to us constantly to make a difference wherever we are, to tell ourselves and the world that we are truly children of God, the sheep of the Shepherd who made such a huge difference in and through his life?

He sends us... the Shepherd sends us on a mission, to announce the name of this Shepherd, the name in which everyone shall be saved, summoned and be sent! We do not announce the name of an emperor or a dictator, we announce the name of a Shepherd - who reaches out to serve, save and give life. Yes, we are sent.. sent on a mission, sent to be shepherds - in our families shepherds to each other; in our society shepherds to the weak, in our faith community shepherds to the children of God. Are we truly, shepherds after the heart of that One True Shepherd?

We fall in line with this Shepherd only in as much as we accept that salvation that comes from the Shepherd, respond to the summon and be ready to be sent in our daily life, to be shepherds after the heart of that Shepherd, our Shepherd, my Shepherd!


இதோ என் ஆயன்...

அணைக்கும், அழைக்கும், அனுப்பும் ஆயன்

ஏப்ரல் 22 - நல்லாயன்  ஞாயிறு 

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது... இன்றைய தினம் உலக திருச்சபையிலே இறையழைத்தலின் ஞாயிறாக தியானிக்கப்பட வேண்டுமென திருச்சபை கருதுகிறது. 

நம் ஆயன் நம்மை அணைக்கிறார்... தேடி வந்து, தூக்கியணைத்து, மன்னித்து நம்மை மீட்கிறார்; தன உயிரையே கொடுத்து மீட்கிறார் (நற்செய்தி யோ 10:11-18).

நம் ஆயன் நம்மை அழைக்கிறார்... அவரது ஆடுகளாய் மட்டுமல்ல, அவரை போலவே ஆயர்களாய் மாற... நம்மை அழைக்கிறார். ஆனால் அவரது ஆடுகளாய் முதலில் மாறாமல் நாம் ஆயர்களாய் மாறமுடியாது என்பதால் முதலில் அவரை ஏற்று இறைவனின் பிள்ளைகளாய் மாற நம்மை அழைக்கிறார் (1 யோ 3:1-2). 

நம் ஆயன் நம்மை அனுப்புகிறார்...நம் அன்றாட வாழ்வில் ஆயர்களாய்....நம் குடும்பத்திலே, சமூகத்திலே, உறவுகளிலே ஆயர்களாய், அழைக்கப்பட்டவர்களாய், அவரது பெயரிலே அனைவருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார் (தி.ப 4:8-12).


Friday, April 20, 2018

Am I with Jesus?

Saturday, 3rd week in Eastertide

21st April, 2018: Acts 9: 31-42; Jn 6: 60-69

Peter is the hero today in the Word...when many were leaving Jesus one by one, there were just the select few who remained with Jesus and Peter was the leader among them. Even later when Jesus was taken to suffer, Peter in spite of his weakness, never wished to leave Jesus. He gives a fabulous reason today: to whom shall we go, you have the Words of eternal life! This is why Peter could do all that we hear him do in the Acts!

Staying with Christ is the criterion to being like Christ. Whatever Christ did Peter did: Jesus said to the crippled, get up, pick up your mat and walk and Peter says the same today to Aeneas; Jesus said Talithacum...that is Rise little child and that is what Peter says today to Tabitha - to rise! Peter did all that Jesus did - it was possible because, Peter decided to Stay with Jesus!

When we stay with Jesus, we naturally become good to others, reach out to others, love others, free others, empower others, encourage others, affirm others, appreciate others, give life to others! Enough to stay with Jesus from the depth of our hearts, all that we do will be life giving..because Jesus said: one who believes in me will do all that I did and more than that.

When we are not with Jesus, we may think we are doing good, we are doing great things... but the sad fact would be we are not life giving, we are not affirming others and we are not empowering others but in all that we do, we are only desperately trying to blow our own ego, gain power for ourselves, become popular for our own sake and try to fend for ourselves!

It is crucial therefore dear friend, to ask ourselves: Am I  with Jesus?

ஏப்ரல் 21: இயேசுவோடே...

அவரோடே வாழ்வோம், அவராகவே வாழ்வோம். 


இன்றைய இறைவார்த்தையில் விஞ்சி நிற்பவர் - பேதுரு! பலரும் இயேசுவை விட்டு விலகி சென்றபோது  ஒரு சிலர் மட்டுமே அவரோடு தங்கினர்... அவர்களில் பேதுருவே தலைவராக நிற்கிறார். கிறிஸ்து கைதாகி துன்புற நேர்ந்தபோதும் கூட, அவரது இயலாமையையும் தாண்டி கிறிஸ்துவோடே இருக்க வேண்டும் என்று துடித்தவர் பேதுரு. அதற்கு இன்று தலையாயதொரு காரணத்தையும் தருகிறார்: யாரிடம் செல்வோம் இறைவா... வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன! 

கிறிஸ்துவோடே தங்குதல் என்பது அவரை போல் வாழ்வதற்கான ஒரு அடிப்படை தேவையாகும். அவரை போன்றே அனைத்தையும் செய்தார் பேதுரு... முடமானவரை கண்டு எழுந்து நட என்றதும், தபிதாவை பார்த்து எழுந்திரு என்றதும், கிறிஸ்து செய்த அதே செயல்கள் என்பதை நாம் அறிவோம்...இது அவரால் முடிந்தது ஏனெனில், அவர் இயேசுவோடே வாழ்ந்தார். 

நாமும் இயேசுவோடே வாழும் போது அவரைப்போலவே பிறருக்கு உயிரூட்டுபவர்களாய், ஊக்கமூட்டுபவர்களாய், உடனிருப்பவர்களாய், நன்மை புரிபவர்களாய், கைகொடுப்பவர்களாய், வாழுவோம். நாம் செய்யும் அனைத்தும் அடுத்தவருக்கு வாழ்வளிப்பதாய் மாறும். ஆனால் அவரோடு நாம் இல்லையெனின் நாம் செய்யும் அனைத்தும் நன்மையாகவே இருப்பினும், அது நமது சுயநலத்திற்காகவும், நமது நற்பெயருக்காகவும், நமது பெயர் பரவுவதற்காகவும், நம்மையே நாம் முன்னிறுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படும்.

நாம் செய்யும் அனைத்திலும், நாம் சிந்திக்கும் அனைத்திலும் நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது: நான் இயேசுவோடே இருக்கிறேனா?

Thursday, April 19, 2018

ஏப்ரல் 20: இறையரசின் சாயல்...

இறைவார்த்தை, இறைப்பணி, இறைச்சமூகம் 

விண்ணிலிருந்து ஒரு குரல் அவரை தொட்டது; இறைவனின் ஊழியர் அவரை குணப்படுத்தினார்; விண்ணிலிருந்து உணவு அவரை வலுப்படுத்தியது. இறையரசின் முழுச்சாயலையும் இங்கு நாம் காண்கின்றோம்!

கிறிஸ்துவின் வாழ்வின் முழு பொருளும் இறையரசை நோக்கியே இருந்தது. இறையரசு மண்ணிலே நிறுவப்பட வேண்டும் என்றே அவர் அல்லும் பகலும் விரும்பினார், இன்னலுற்றார், தன் வாழ்வையே தந்தார். இந்த இறையரசு மண்ணில் வர மூன்று கூறுகள் இணைய வேண்டியுள்ளது...அவற்றையே இன்று நாம் காண்கின்றோம்... 

மேலிருந்து நம் உள்ளங்களில் ஒலிக்கும் இறைவார்த்தை... ஒவ்வொரு நாளும் இதற்கு நாம் செவிமடுக்க அழைக்கப்படுகிறோம். செவிமடுக்கவும், அதன் படி வாழ்வை மாற்றவும்.

உடன் வாழும் இறைச்சமூகத்தில் இறைவனின் இருத்தலை உணர அழைக்கப்படுகிறோம்... நானும் இறைவனும் மட்டும் என்று வாழ்ந்தால் அது உண்மையிலேயே கிறிஸ்து கண்ட கணவாகாது. அடுத்தவரை நாம் தொல்லையாக நினைக்கலாம்... அவ்வாறே அனானியா சவுலை நினைத்தார்...ஆனால் இறைவன் செய்த பெரும் காரியங்கள் நமக்கு தெரியும் அல்லவா? 

அருளடையாளங்கள், வழிபாடுகள், சிறப்பாக நற்கருணையால் ஊட்டம்பெற்றவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். 

இம்மூன்றும் இணையும் போது... அது இறையரசின் சாயலல்லாமல் வேறென்ன?


The Word, the Sacrament and the Community!

Friday, 3rd week in Eastertide

20th April, 2018: Acts 9: 1-20; Jn 6 : 52-59

The Voice from heaven touched him;  the man sent by heaven healed him;  the bread from heaven strengthened him. What an example of the Word,  the Sacrament and the Community of faith working together for God's Reign to be established!

This is the ideal faith experience - that we hear the Lord speaking to us in the Word, calling us to transformation. The Word comes to us everyday, provided we are ready to receive it. If we really allow the Word to touch us, we shall be transformed.

The Community is around to welcome us, love us, accept us, affirm us and be enriched by us. We cannot think of our Christian faith without the community - the Christian faith is not complete when it is just me and my God! I may have any number of reasons to say I feel better by myself - that would only be an excuse! Do you feel those in the community are no help at all - that is how Ananias thought of Saul; but we know what God made of him.

The Sacraments, specially the Sacrament of the Eucharist is the summit of our faith experience - the Lord my Saviour gives me of himself, inviting me to give of myself to my brothers and sisters. How beautiful it would be, if I live my Christian faith to the full - with the Word,the Sacrament and the Community all in place! That is the beginning of the Reign of God.

Wednesday, April 18, 2018

Letting myself be drawn!

Thursday, 3rd week in Eastertide

19th April, 2018: Acts 8: 26-40; Jn 6: 44-51

A couple of days ago, on a Facebook community, a person had posted a message: Give me one good reason why I should leave my denomination to join the Catholic Church? There were many who were giving him reasons, so valid and so edifying. But when I saw it I felt like, and I did post the following lines:
"Many can give you umpteen reasons to join the Catholic Church, but none of them can suffice, for you arrive there if you feel you are called! Yes, you need to feel the call of the Father, the call of the Saviour, the prompting of the Spirit to arrive there! If you have it in you, join!"

Jesus declares today, it is the Lord who draws one to himself. And the Lord draws those who are drawn to the Lord in their choices,  in their priorities,  in their daily decisions. It is of course the Lord who initiates but it is upto us to readily and promptly acknowledge these initiatives and respond to them from the depths of our beings. The one who begins the good work in us will surely bring it to its completion (cf. Phil 1:6) in God's own time.

Phillip is mightily used by God in the first reading today - taken from place to place by the Spirit. It was because he allowed himself to be used;  he submitted to the plans of God. The Court Official is chosen to belong to the Lord because he had a fundamental thirst for the knowledge of the matters of God.

Yes, the Lord is drawing you close to himself...are your ready and willing to let yourself be drawn?

ஏப்ரல் 19: அவரால் ஈர்க்கப்பட

ஈர்க்கப்பட நான் அனுமதிக்கவேண்டும்!

இரண்டு நாட்களுக்கு முன் முகநூல் குழுமம் ஒன்றில் ஒரு நண்பர் ஒரு கேள்வி ஒன்றை பதிவிட்டிருந்தார்... "நான் இப்போதிருக்கும் சபையிலிருந்து கத்தோலிக்க திருச்சபைக்கு மாற எனக்கு ஒரு காரணம் கூறுங்கள்", என்று. பலரும் பல காரணங்களை பதிவிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அந்த கேள்வியை பார்த்த போது என் மனதில் தோன்றியது இதுதான். இதை நான் பதிவிட்டும் இருந்தேன்: "பலரும் பல காரணங்களை உங்களுக்கு தரலாம். அத்தனையும் ஒன்று சேர்ந்தாலும் அந்த காரணம் உங்களுக்கு போதாது... ஏனெனில், நீங்கள் அழைக்கப்படாவிடில் இந்த திருச்சபையில் இருக்க இயலாது. நீங்கள் ஈர்க்கப்பட்டாலொழிய, தந்தையாம் இறைவனின் திருவுளத்தால், இறைமகனின் மீட்பினால், தூய ஆவியின் உள்ளுந்துதலால் நீங்கள் அழைக்கப்படாவிடில், எந்த காரணமும் உங்களுக்கு போதாது. அழைக்கப்பட்டதாக உணர்கிறீர்களா... எந்த காரணமும் உங்களை தடுக்காது"

இன்று கிறிஸ்து நம்மை பார்த்து கூறுகிறார்: என் தந்தையால் என்னிடம் ஈர்க்கப்படாத எவரும் என்னிடம் வர இயலாது! ஆம் அன்புக்குரியவர்களே  ... நம் இறைவன் நம்மை தொடர்ந்து தன் அன்பினால் ஈர்த்தவண்ணமே இருக்கிறார்... அதை நாம் உணர்ந்து நம்மையே ஈர்க்கப்பட அனுமதிக்க வேண்டும். 

இன்று பிலிப்பு இறைவனால் எத்தனை அழகாக பயன்படுத்தப்படுகிறார் என்று நாம் இறைவார்த்தையில் கேட்கிறோம், ஏனெனில் அவர் தன்னேயே ஈர்க்கப்பட அனுமதித்தார். அந்த எதியோப்பிய அமைச்சர் அதிசயமாய் இறைவனை கண்டடைகிறார், திருமுழுக்கு பெறுகிறார்... ஏனெனில் அவரது ஆர்வத்தின் காரணமாய் தன்னையே இறைவனால் ஈர்க்கப்பட அவர் அனுமதித்தார்.

இறைவன் நம் உள்ளத்திலே பல நல்லெண்ணங்களையும் நற்சிந்தனைகளையும் விதைத்த வண்ணமே இருக்கிறார்... அவரால் நாம் ஈர்க்கப்பட வேண்டும்... அப்போது நம் வழியாய் இவ்வுலகம் பெரும் அதிசயங்களை காணும். அவரால் ஈர்க்கப்பட நான் தயாரா?


A couple of days ago, on a Facebook community, a person had posted a message: Give me one good reason why I should leave my denomination to join the Catholic Church? There were many who were giving him reasons, so valid and so edifying. But when I saw it I felt like, and I did post the following lines:
"Many can give you umpteen reasons to join the Catholic Church, but none of them can suffice, for you arrive there if you feel you are called! Yes, you need to feel the call of the Father, the call of the Saviour, the prompting of the Spirit to arrive there! If you have it in you, join!"

Jesus declares today, it is the Lord who draws one to himself. And the Lord draws those who are drawn to the Lord in their choices,  in their priorities,  in their daily decisions. It is of course the Lord who initiates but it is upto us to readily and promptly acknowledge these initiatives and respond to them from the depths of our beings. The one who begins the good work in us will surely bring it to its completion (cf. Phil 1:6) in God's own time.

Phillip is mightily used by God in the first reading today - taken from place to place by the Spirit. It was because he allowed himself to be used;  he submitted to the plans of God. The Court Official is chosen to belong to the Lord because he had a fundamental thirst for the knowledge of the matters of God.

Yes, the Lord is drawing you close to himself...are your ready and willing to let yourself be drawn?