Sunday, April 15, 2018

To See and Side the right Priorities!

Monday, 3rd week in Eastertide

16th April, 2018: Acts 6:8-15; Jn 6: 22-29

His face shone like an angel. But they decided to kill him all the same! They saw the great works and words that Jesus had but they ran after him only for the food they could get. At times we kill the things that pertain to God not only by being against them but by even not being attentive to the true spirit of it.

It is easier to ward off dangers from the quarters that are known to be contrary to us. But the more dangerous ones are those that seem to take a neutral stand within us and amidst us,  they can be real spirit dampeners and blind leaders.

First of all the call today is to make it clear to the world what my priority is! In order that I do it, I should know it first - what are those things on which I act? What are those things that really matter to me? What are those criteria or events that move me to action immediately... are they pertaining to my own good or to the common good or to Truth! Once I am clear of the priority I have, I need to see how close to or how far from God it is! If God and God's word is my priority, there could be nothing better than that!

The Second call  that I have is, to be alert to people  and their priorities, so that we do not side the wrong faction! Here is where we need to have the clarity to know the priority of people - appreciate it when right and denounce it when wrong! Fearlessly! Because we see the heavens open and the Son of God seated at the right hand of the Father!

ஏப்ரல் 16: உன் முக்கியத்துவங்கள் என்ன?

எதை நீ முன்னிறுத்துகிறாய் - உலகம் உன்னை கேட்கிறது!


ஸ்தேவானின் முகம் ஒளிர்வதை அவர்கள் கண்டார்கள்... எனினும் அவரை கொன்றார்கள். கிறிஸ்து செய்த அனைத்து புதுமைகளையும் அவர்கள் கண்டார்கள், எனினும் அவர் தந்த வெறும் உணவுக்காக அவரை பின்தொடர்ந்தார்கள்! எதிர்த்து நிற்பதாலோ, நிராகரிப்பதாலோ மட்டுமல்ல சரியான முக்கியத்துவத்தை தராமலிருப்பதாலும் இறைவனை விட்டு நாம் அகன்று போகலாம். எதிர்த்து நிற்பது என்பதோ, நிராகரிப்பது என்பதோ தெளிவான ஒரு நிலைப்பாடாகும்; ஆனால் உடனிருப்பது போன்றே இருப்பதும் அதே சமயம், உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் தராமலிருப்பதும் நமது வாழ்க்கையின் தரத்தையே குறைத்துவிடுகிறது. 

இறைவனின் பிள்ளைகள், கடவுளின் மக்கள் என்றால், நமது வாழ்வில் எது முக்கியத்துவம் பெறுகிறது என்று இந்த உலகிற்கு நாம்  தெளிவாக எடுத்து சொல்லியாக வேண்டும். உலகிற்கு எடுத்து சொல்லவேண்டுமென்றால், அது எனக்கு தெரிந்திருக்கவேண்டும். உண்மையிலேயே என் வாழ்வின் முக்கியத்துவம் என்ன? எதை நான் முதன்மை படுத்துகிறேன்? எது எனது கவனத்தையும் நேரத்தையும் அதிகம் எடுத்துக்கொள்கிறது...என்று நான் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

இறைவனையும் இறைவனுக்கு உரியதையும் நான் முன்னிறுத்தும் போது, எனது வாழ்வும் ஒளிர்கின்றது, அதை உலகும் காண்கின்றது. காண்பதனால் மட்டுமே அதை உலகு ஏற்கப்போவதும் இல்லை, என்னை கொண்டாடப்போவதும் இல்லை... எனினும் என் நிலைப்பாடுகள் மாறாமலிருக்கவேண்டும்... அப்படி இருப்பின், நானும் விண்ணகம் திறந்திருப்பதையும், மனுமகன் தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பதையும் காண்பேன்!


Saturday, April 14, 2018

கிறிஸ்துவே காலத்தின் நிறைவு

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு - 15.04.2018

வாழ்வின் பல வேளைகளில் நாம் நமது துன்பங்களையும், சோதனைகளையும் முன்னிறுத்தி ஐயம் கொள்வதுண்டு... இந்த மண்ணக வாழ்விற்கு உண்மையிலேயே பொருள் உள்ளதா? எதை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்? நிகழும் அனைத்திற்கும் ஏதாவது காரணமுள்ளதா? என்றெல்லாம் கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் ஒருவரே..அது கிறிஸ்து மட்டுமே, அவரே காலத்தின் நிறைவு... 

அவரில் என் வாழ்வு வாழப்படும் போது அந்த நிறைவு என்னை ஆட்கொள்ளுகிறது... அவரை தவிர்த்து என் வாழ்வை வாழ நினைக்கும் போது அந்த நிறைவு என்னை விட்டு விலகி போகின்றது. இன்று பொருளின்றி வாழ்வோர் எத்தனை பேர், அவர்கள் மனதில் இருக்கும் கேள்விகளும் ஐயங்களும் எத்தனை... நாமறிந்ததே!

இந்நிறைவை நாமடைய இயல்பைமீறிய செயல்கள் ஏதும் செய்யவேண்டிய அவசியமில்லை! என் அன்றாட வாழ்வே இந்நிறைவை நோக்கிய பயணம் தான் என்பதை நான் உணர்ந்துகொள்ள வேண்டும். என் அன்றாட தேர்வுகள் என்ன? நான் பேச தெரிந்துகொள்ளும் சொற்கள், நான் சிந்திக்க முதன்மைப்படுத்தும் எண்ணங்கள், என் வாழ்வில் நான் கொடுக்கும் முக்கியத்துவங்கள்...இவையே என் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இவை கிறிஸ்துவை நோக்கி இருக்கும் போது... என் அன்றாட வாழ்வே நிறைவை நோக்கிய பயணமாகிறது!

Christ the Fulfilment

Christ, We and Everyday!

III Sunday of Easter: 15th April, 2018
Acts 3: 13-15, 17-19; 1 Jn 2: 1-5a; Lk 24: 35-48

What am I upto? What is happening in my life? Why am I going through all that I am going through in life? I have always been very obedient to the Lord and in spite of that I am through so many things in life...but why? - these are some questions we often come up with or listen from people. 

What is the meaning of suffering? What is the ultimate purpose of life? Will I be totally certain of it at any point of time within my lifetime? If yes, then where is the element of mystery that makes my life so rich?

Very rarely does a Sunday Liturgy lack any reading from the Old Testament. If you notice today, all the three readings are from the New Testament. And there seems to be a logical reason behind it. The readings are all taken from the new testament to draw home to us the fact that Jesus Christ,the Son of God, is the fulfillment of the promises from the initial promise at the Garden of Eden right through the law and the prophets! The first reading and the Gospel establishes that in clear terms. When the fullness of time had come (Gal 4:4), God sent the fulfillment of God's promises.

If Christ is the fulfillment, we are called to be fulfillments too. It is true that Christ is the fullness of Revelation, the climax of God's revelation and the entirety of all that is to be revealed about God. But that Revelation to the world is going on,in progress even today, continuously, in and through you and me. That is what God wished and Jesus initiated. that we become the continued fulfillments of God's salvific plan. Jesus made us living testimonies of the unfolding plan of God. We are not finished products and God's salvation plan is not a closed chapter. The salvation is wrought by the blood of Christ, but that salvation history is being written, chapter by chapter, a page a day!

Yes, our everyday is a page of our salvation history. Our choices, our lifestyle, our decisions, our assents and our negations - everything is part of the holisitic salvation history being written by God, in and through my life. The question is, how flexible am I in the hands of God; how faithful am I to the mind of God; how freely do I submit myself to the plan of God? The teachings of the Lord, that comes our way through the various elements of our faith life, like the commandments, the traditional expressions of faith, the need to find time and space for God in one's life, the obligation to express that importance of that time and space, through our thoughts, words and deeds of love towards our neighbours, the invitation to live our daily life with the perspective of eternity always before our eyes: that everything finds its fulfillment only in God... these are those elements which make our everyday a fulfillment of God's plan and project. 

Christ, the fulfillment of all the promises so far, invites us to be the continued fulfillments of the salvation history that he brought to its perfection, on a daily basis by knowing, recognising and submitting to God and God's designs!



Friday, April 13, 2018

ஏப்ரல் 14: புயல் நடுவே ஒரு குரல்

நான் தான் அஞ்சாதீர்கள்! 

உயிர்த்த கிறிஸ்துவின் செய்தி ஏற்று சில காலத்திற்குள்ளாக ஒரு குழப்பம்... கிரேக்கர்கள் மதியிலுருந்து ஒரு குமுறல் எபிரேயர்களுக்கு எதிராக... உரிமைகள், தேவைகள், எங்கள் மக்கள், மற்றவர்கள்... என தொடக்க காலமுதலே திருச்சபையில் குழப்பங்கள் இருந்தேவருகின்றன. ஆனால் அதை அப்போஸ்தலர்கள் எதிர்கொண்ட விதம் தான் நம்மை வியக்க வைக்கிறன்றது! எந்த சலனமுமின்றி, நிதானமாய், சரியான கண்ணோட்டத்தோடு, ஒளிவு மறைவின்றி, சார்பு நிலைப்பாடுகளின்றி, உண்மையை உண்மையாய் எதிர்கொள்ளும் பாங்கு நமக்கு பல பாடங்களை கற்பிக்கின்றன. 

புயலும் இருளும் ஒன்றாய் வந்து மிரட்டும் சூழலில், இறந்துவிடுவோமா என்ற கலக்கத்தின் மத்தியில், எதோ ஒரு உருவம் அவர்களை தொடர்வதை கண்டு மிரளுகின்றனர் அப்போஸ்தலர்கள்... அஞ்சாதீர்கள்... நான் தான் என்று உயிர்த்த கிறிஸ்துவின் குரல் கேட்க, சாந்தமாய் கரைசேருகின்றனர்! இது அவர்களுக்கு ஒரு பாடமாய் அமைந்தது, பிற்காலத்தில் எழும் குழப்பங்களை எப்படி சந்திக்கவேண்டும் என்பதற்கு. 

நமக்கும் இது ஒரு பாடமே! குழப்பங்கள், கவலைகள், கேள்விகள், வேள்விகள் எத்தனை வந்தாலும், உயிர்த்த என் இறைவன் என்னோடு உள்ளார் என்பதை நான் ஆழமாக உணரும் போது எனக்குள் தோன்றும் அமைதியும், சாந்தமும் என்னை கரைசேர்த்துவிடும் என்பதே அப்பாடம். உண்மையில் உயிர்த்த கிறிஸ்துவின் மக்களென்றால், நம் வாழ்வில் வீசும் புயலின் மத்தியில் ஒரு குரல் நமக்கு கேட்க வேண்டும்; கேட்கும்! 

அஞ்சாதே... நான் தான். உன்னோடே இருக்கிறேன். அமைதியாய் எதிர்கொள், கரைகாணும் நேரம் வெகு தொலைவில் இல்லை!


Confusion and Crisis: BE CALM AND FEEL THE LORD

Saturday, 2nd week in Eastertide 

14th April, 2018: Acts 6: 1-6; Jn 6: 16-21

When we live and work together, we are sure to have misgivings and clash of opinions, unless we cease to think freely and forget our individuality. We see in the first reading today the earliest of misunderstandings and complaints that arose in the new born church! The way the apostles dealt with it, was so Christ-like.

When the sea was stirred with the storm that arose, the hearts of those in the boat were disturbed too, and Jesus walked up to them and said: It is I; do not be afraid! He assured them, the stirring will cause no damage, if you understand the Lord is with you. The storm will not upset the boat, until you know that it is the Lord who is in charge! 

When a complaint arose, the Apostles were not alarmed, they were not reacting to the complaint. They knew that it was a sign the Lord was giving them for their own growth. Confusions, complaints and contradictory opinions were instrumental moments through which the Lord effected a splendid consolidation in the Christian faith experience post resurrection. 

Today in parish communities, or in basic christian communities or in families or in Religious communities, how do we look at differences of opinions? Is there a true freedom of expression? Are we matured enough to look at these as experiences of growth? That requires a true mindset of faith - to realise the presence of the Lord at all times, even during moments of crisis and confusion. 

Thursday, April 12, 2018

ஏப்ரல் 13: நிலைபெறும் நம்பிக்கை

தப்பித்தல்...நழுவுதல்...தழுவுதல்...நிலைபெறுதல்!

வாழ்வில் சோதனைகளை சநதிக்காதோர் யாரும் இலர்! அதை சந்திக்கும் விதத்திலே தான் மக்கள் வேறுபடுகின்றனர்! கிறிஸ்தவராய் அடையாளம் காணப்பட வேண்டுமென்றால், நாம் சோதனைகளை சந்திக்கும் விதம் எப்படி இருக்கவேண்டுமென இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்து கூறுகின்றது... திருத்தூதர் பணியில் முதற்கிறிஸ்தவர்களும் நற்செய்தியில் கிறிஸ்துவும் இதை நமக்கு கற்றுக்கொடுக்கின்றனர்... 

அத்தனை பெரிய கூட்டம் இருக்கிறது என்று கிறிஸ்து அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடவில்லை. எங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சீடர்களும் நழுவிவிடவில்லை! அதுபோலவே, எதிர்த்து நின்ற யூதர்களும் உரோமையர்களும் எத்தனை ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும் பயத்தினால் அவர்கள் சொல்வதை முதற்கிறிஸ்தவர்கள் தழுவிக்கொள்ளவும் இல்லை.

நம் வாழ்வில் சில நேரங்களில் சோதனைகள் வரும்போது எப்படி தப்பிக்கலாம் என்றே முதலில் நாம் சிந்தித்தோம் என்றால் நாம் உண்மையிலே கிறிஸ்துவின் மனநிலையை கொண்டவர்களா? 

சோதனைகள் வரும்போது யார் மீது பழி சுமத்தலாம், நமது பொறுப்பையும், கடமையையும் நமது தோள்களிலிருந்து உதறித்தள்ளி எப்படி நழுவலாம் என்பதே நமது சிந்தனையானால், நாம் கிறிஸ்துவின் சீடர்களா?

நமக்கேன் தொல்லை, சற்று குழைந்து தான் போவோமே என்று எதிர்த்துவரும் ஆற்றல்களை வேறு வழியின்றி தழுவ தயாராகிவிடும்போது நாம் உண்மையிலேயே அவரது வழித்தோன்றல்களா?

எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலும் நன்மையிலும் நிலைபெறும் போது... இன்று இல்லையென்றாலும் ஒருநாள் உண்மையும் நீதியும் அன்பும் முளைத்தெழும் என்ற மன உறுதியில் நிலைபெறும் போது... எதை இழந்தாலும், என் உயிரையும் இழந்தாலும், என் உயிர்த்த கிறிஸ்துவோடு இருக்கும் போது எனக்கு இழப்பேது என்ற நம்பிக்கையில் நிலைபெறும் போது ... நான் அவராகிறேன்! அவரது சீடராகிறேன்! அவரது வழித்தோன்றலாகிறேன்! 

நிலைபெறும் நம்பிக்கையில் வளர முடிவெடுப்போம்!

Escape, Shrink, Compromise or ENDURE?

Friday, 2nd week in Eastertide

13th April, 2018: Acts 5: 34-42; Jn 6: 1-15


One term that unites the two readings today is the term "test". Jesus himself is tested with such a big number to feed. He tests his disciples throwing a challenge on them. And in the first reading we have Gamaliel setting up a test for the believers: a test of time! All of these are tests that bring out the quality of Endurance.

If Jesus were to have taken an escapist mode of reaction to the situation,  or the disciples the shirking mode,  or the first believers a comfort seeking compromise mode... we would have nothing of what we believe and belong to today.

May we be have these modes in our way of responding to trying times in our life: 
- Are we on a Escape Mode: trying to run away from the situation, take the shortest exit possible, easy decisions to quit?
- Are we on a Shrink Mode: closing our eyes and refusing to see the problem, recklessly trying to find someone on whom we can blame the entire thing wash our hands off it?
- Are we on a Compromise Mode: saying anything is fine and nothing is wrong, each one has the liberty to do what he or she wants, provided we do not disturb each other?

None of these is expected of a true disciple of Christ! The only mode that is becoming of a Christ-ian is the Endurance Mode.


Endurance is the time tested virtue that enables us to stand the test of time. The Martyrs of old,  great saints in history,  the holy ones of our times,  all of them stand proofs to one fact: Endurance helps faith mature and endurance is a mark of a mature faith!

Obedience - In Spirit, truth and freedom

Thursday, 2nd week in Eastertide

12th April, 2018: Acts 5:27-33;Jn 3: 31-36

We must obey God rather than men; we must obey God's directions rather than men's directives; we must obey the promptings of the Spirit rather than the rulings of men! What a clarity on the part of the disciples. If only we had today that same clarity! 

Do not conform to the standards of the world; rather renewed in Spirit conform to the mind of Christ, instructed St. Paul well in this line (cf. Rom 12:2). At times we justify conformity and compromise on the grounds of peace in the house; other times we create division and sport rebellion under the pretext of being unique and convinced, while it could just be a way of promoting one's own convenience! Our own innermost self is our judge, and ofcourse the one who resides there: the Spirit of the Lord! 

Obedience is not merely conformity to the rule; nor its opposite mere negligence of the rule. It is all about being sincere to the innermost promptings of the Spirit. Being understood when one follows that promptings, is not always guaranteed. Being misunderstood cannot prevent me from being sincere to those promptings. One who obeys will see life (cf. Jn 3:36), because in fact, obedience is seeking Truth and Truth alone shall set us free!

Tuesday, April 10, 2018

ஏப்ரல் 11: தெளிவு மட்டுமல்ல துணிவும் கூட!

உயிர்ப்பின் ஒளி தரும் புதுவாழ்வு!


சிறை, விலங்கு, தண்டனை, கசையடி, மிரட்டல்கள்... இவை எவற்றுக்கும் அஞ்சாத அப்போஸ்த்தலர்களை இந்த நாட்களில் இறைவார்த்தை நமக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. இன்றும் பேதுருவும் ஒரு சில அப்போஸ்தலர்களும் சிறையிலிருந்து அதிசயமாக வெளிவருகிறார்கள்... மீண்டும் பிடிபடுவதற்கே. எனினும் எதற்கும் துணித்தவர்களாய் ஓடி ஒளியாமல் இறைவனின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்பட இசைகிறார்கள். வார்த்தையை அறிவிக்கும் அந்த கடமைக்காக, எதையும் இழக்க அவர்கள் தயாராகும் துணிவு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதே அப்போஸ்தலர்கள் தானே கிறிஸ்துவை மறுதலித்தார்கள், விட்டு ஓடினார்கள், அவரது வாழ்வு முடிந்துபோன கதை என்று கருதினார்கள்? ஆனால் இப்போதோ...

ஆம் மாற்றத்தின் காரணம் - உயிர்த்த கிறிஸ்துவின் ஒளி! உயிர்ப்பின் ஒளி அவர்களுக்கு தெளிவு தந்தது, புது புரிதல் தந்தது, புது வாழ்வு தந்தது, புத்துயிர் தந்தது. உண்மையை கண்டுவிட்டவர்கள் பெறும் ஒளி அது...எதையும் இழக்க தயாராகும் துணிவை தரக்கூடிய ஒளி. 

சாலக்குடியின் டிவைன் தியான மையத்தின் சகோதரர் மாரியோ அவர்களை பற்றி உறுதியாக கேள்விப்பட்டிருப்பீர்கள்... எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் தனது 25வது வயதிலே கிறிஸ்துவை அறிந்துகொண்டான், நல்ல வருமானம் தந்த தனது பொறியியல் பணியையும் தூக்கியெறிந்துவிட்டு, தன்னை முழுவதுமாக தள்ளி வைத்த தனது குடும்பத்தை சார்ந்தவர்களையும் விட்டுவிட்டு, யாரும் அறியாத ஓரிடத்தில் சென்று குருவானவராக வேண்டும் என தற்போது பயின்றுகொண்டிருக்கிறான்... இந்தியாவிலும், வேறு பிற இடங்களிலும் கிறிஸ்துவில் தங்களது நம்பிக்கைக்காக பல துன்பங்களை சந்தித்துவரும் சகோதர சகோதரிகளை நாம் அறிவோம்... இன்று திருத்தூதர் பணியில் நாம் கேட்கும் சூழலை இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

உண்மையை நான் கண்டுகொண்டேன் என்றால், அதை ஏற்றுக்கொள்ள துணித்துவிட்டேன் என்றால், அதையே என் வாழ்வின் அடித்தளமாய் கொண்டுவாழ நினைத்தேன் என்றால், என்னை யாராலும் தடுக்க முடியாது... ஆனால் அந்த உண்மையை நான் காண, புரிந்துக்கொள்ள, ஒரே வழி தான் உண்டு: உயிர்ப்பின் ஒளியை எனக்குள் நான் கொண்டிருக்க வேண்டும். உயிர்ப்பின் ஒளி தெளிவு மட்டுமல்ல, துணிவும் தரும்!