Wednesday, August 8, 2018

A heart worthy of the Covenant

Thursday, 18th week in Ordinary time

August 9, 2018: Jer 31: 31-34; Mt 16: 13-23


For the third day today, the discussion about the Covenant of the Lord continues. The covenant is fundamentally a relationship between the Lord and us, God's people, God's children! And the gauge with which one's connectedness to the covenant is measured is the depth or the intimacy of the mutual knowledge of the partners of the covenant. There is no doubt, the Lord knows us through and through. What about our knowing the Lord?

The day will come when you will not have to teach your loved ones to know God...for every one will know God in those days, promises the Lord. Jesus applauds Peter, saying his knowledge of Christ was exceptional, because it was God given! The day has come when Peter knew who the Lord was, as we read in Jeremiah.

The reality is, though God reveals Godself to us and we get to know God so intimately, our memories are so very fickle and short lived. We give into our human tendencies so easily and readily as if there were nothing so great between us and God! Our memories may be thus short, but not God's. God forgives, waits and readily renews the covenant that God made with us. 

The Lord promises to give us a new heart, a heart of flesh, a heart that takes after the sensibilities of God, a heart that sees as God does, a heart that hears as God does, a heart that feels as God does, a heart that loves as God loves... a heart that is worthy of the covenant that God has made with us.





Tuesday, August 7, 2018

எஞ்சியோரும், மற்றோரும்!

ஆகஸ்ட் 8, 2018: எரே 31: 1-7; மத் 15: 21-28


நான் உங்கள் கடவுளாய் இருப்பேன், நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள், என்று தன் மக்களோடு தான் செய்த உடன்படிக்கையை இறைவன் என்றுமே மறந்ததில்லை. மக்கள் எத்தனை முறை தவறுகள் செய்து அவரை விட்டு விலகினாலும், அவரோ அம்மக்களை திரும்ப அழைத்து அணைத்த வண்ணமே இருக்கிறார். இதையே இன்று எரேமியாவும் நமக்கு எடுத்து சொல்கிறார். ஆனால் இறுதியில் இறைவனின் நன்மை தனத்தை அனுபவித்து மகிழ இருப்பவர்கள் யார் என்று இறைவார்த்தை நமக்கு கூறும்போது, எஞ்சியோரும் மற்றோருமே இறுதியாய் மகிழ்வார்கள் என்று நம்மை எச்சரிக்கிறது! 

எஞ்சியோர் என்பவர்கள் இந்த உலகமே ஒரு வழியில் செல்ல, தாங்கள் மட்டும் நிதானித்து சரி எது பிழை எது, இறைவனுக்கு ஏற்றது எது ஏற்பில்லாதது எது, என்று சிந்தித்து முடிவெடுத்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வழியிலிருந்து தவறாமல் இறுதியாய் எஞ்சி நிற்பவர்களாவர்.   

மற்றோர் என்பவர்கள் பொதுவாக யாராலும் முக்கியத்துவம் தரப்படாது, தாங்களே இறைவனுக்கு உரியவர்கள் என்று தங்களையே உயர்திக்கொள்ளும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு, கடவுளையே தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல் மார்தட்டி திரியும் மூளையற்ற மனிதர்களிடமிருந்து தனித்து விடுபட்ட எளிமையான மக்கள்... இவர்களின் எளிமையில் இறைவனை மட்டுமே நம்பும் குணத்தை பெற்றவர்கள், இறைவன் முன் தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உண்மையில் உணர்ந்து நம்புபவர்கள், உண்மையையம், அன்பையும் இறைவனின் இரக்கத்தையும் மட்டுமே முதன்மைபடுத்தி வாழ்பவர்கள். 

இந்த எஞ்சியோரும் மற்றோரும் மட்டுமே இறுதியில் இறைவனின் உடன்படிக்கைக்கு உரியவர்கள் ஆவார்கள் என்று விளக்கும் இன்றைய வாசகங்கள் நமக்கு தரும் பாடம் ஒன்றே: உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள், மாறாக கிறிஸ்துவில் மாற்றம் பெற்று புது படைப்பாகுங்கள்! 

The Remnant and the Rest

Wednesday, 18th week in Ordinary time 

August 8, 2018: Jer 31: 1-7; Mt 15: 21-28

The Lord renews the covenant with the people  inspite  of their failures because the Lord had always loved  them with an everlasting love. Today the Word warns us that those who will finally taste the fruits of God's faithfulness are the remnant and the rest of the people who come by and stick to the Lord.

The remnant are those who choose to differ from the mainstream inspired  by a genuine conviction and sincere effort to be integral. While the entire world runs after some things that they consider important, even more important than the absolutes like God, love and humanity, there are a few who remain strong, unmoved and totally committed to truth. These form the remnant that pleases God.

The rest are those who are least expected to be favoured in the eyes of the Lord. The world has its own criteria of judgement but the Lord has a totally different set of criteria... single minded dedication to the Lord, genuine love for God's people and authentic life after the mind of God. Whatever the world may say, these become the beloved of God!

The message is simple and straightforward but highly challenging: Do not conform to the world;  instead be transformed in Christ into new beings!

Monday, August 6, 2018

The Courage to Wait

Tuesday, 18th week in Ordinary time

August 7, 2018: Jer 30: 1-2,12-15,18-22; Mt 14: 22-36

Waiting seems an undue demand on persons these days. Traffic, queues, public modes of transport...everywhere this is the feeling we see invariably - people resent to wait. With the Lord, there is no other way to peace than to wait... for God abides in eternity!

Jeremiah today speaks of an imminent and wholesome intervention by God on behalf of the people of Israel. All this while he would be taking to task those people who spoke of a positive change of the times, he would find fault and challenge them. But now they are all silenced, but Jeremiah speaks of it: restoring, rebuilding and raising Israel back from its dust, to be God's people.

Jesus' intention was to state without doubt the fact that whatever happens the Lord never leaves us- be it storming sea or the threatening world around, the last word is the Lord's and we need to wait till the last word is said! It takes enormous courage to do that. 

Our patience runs dry, our ground appears to give way, our trust shifts focus and our minds begin to question. When every thing around us seems to be going wrong, can we just hold the hands of the Lord and keep walking come what may... that requires the courage to wait!

காத்திருத்தலே நம்பிக்கை

ஆகஸ்ட் 7, 2018: எரே 30: 1-2,12-15,18-22; மத் 14: 22-36


காத்திருத்தல் என்பது மக்களுக்கு சாதாரணமாக எரிச்சலூட்டும் தருணமாகவே உள்ளது. சாலை ஒழுங்காக இருக்கட்டும், வாகன நெரிசலாக இருக்கட்டும், பொது இடங்களில் வரிசைகளாகட்டும், பொது போக்குவரத்திற்கு நின்றிருக்கும் நேரமாகட்டும்... இவை அனைத்துமே மக்களை பொறுமை இழக்கவும், அங்கலாய்க்கவும் செய்கிறது. ஆனால் இறைவனை பொறுத்தமட்டில், மன அமைதிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் காத்திருப்பதை தவிர்த்து வேறு எந்த வழியும் நமக்கு இல்லை! ஏனெனில் இறைவனின் இருத்தல் கால நேரத்திற்குள் அடங்காத ஒன்றாகும்... அவரை பொறுத்தவரை ஆயிரமாண்டு ஒரு நாள் என்று நாம் படிப்பது இதை தானே! இறைவன் முதலும் முடிவும் அற்றவராய் மட்டுமல்ல, கடந்தவை நிகழ்பவை என்ற வேறுபாடற்று இருக்கிறார்.

எரேமியா இன்று நம்மிடம் இறைவன் செயல்படும் காலம் நெருங்கிவிட்டது என்று கூறும்போது, அந்த நெருக்கத்தை நாம் ஏதோ இன்றோ நாளையோ என்று பொருள் கொண்டால் அது குழப்பம் தரும். இறைவனுக்கு எதிராய் தங்கள் மனம் போன போக்கில் பேசியவர்களை எல்லாம் சாடிய எரேமியா இறைவன் தனக்கே உரிய நேரத்தில் நமது வாழ்வின் பொருளை நாம் உணர செய்வார் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். 

கிறிஸ்துவும் இதையே வேறு வகையில் நமக்கு நினைவுறுத்துகிறார்... புயல் சூழ்ந்தாலும், இருள் படர்ந்தாலும், பகைவர் உன்னை நெருக்கினாலும், எந்த நேரத்திலும் உன் மனதை இழந்துவிடாதே... இறுதி வார்த்தை கடவுளுடையதாகவே இருக்கும்! அந்த இறுதி வார்த்தை வரை நாம் காத்திருத்தல் வேண்டும்... இந்த காத்திருத்தலே நம்பிக்கை!

நமது பொறுமை இழந்துவிடாமல், இறைவன் மீதுள்ள பற்று குறைந்துவிடாமல், மன உறுதி மங்கிவிடாமல், இறைவன் மீது பதித்த கண்களை ஒருபோதும் எடுத்துவிடாமல், பிடித்த அவரது கைகளை எந்நேரத்திலும் விட்டுவிடாமல் காத்திருத்தலே நம்பிக்கை!


Sunday, August 5, 2018

விடிவெள்ளிக்கு முன் விளக்காக!

ஆகஸ்ட் 6, 2018: ஆண்டவரின் உருமாற்ற விழா 

தானியேல் 7: 9-10, 13-14;  2 பேதுரு 1: 16-19; மத் 17: 1-9

தாபோர் மலையிலுள்ள உருமாற்றத்தின் 
ஆலயத்தின் கூரையின் உட்புறத்திலுள்ள ஓவிய அமைப்பு
 

பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்று, என்று தூய பேதுரு நமக்கு அளிக்கும் ஒப்புமை நமது கிறிஸ்தவ வாழ்விற்கு முற்றிலும் தகுந்த ஒப்புமையாக விளங்குகிறது. நமது நம்பிக்கை, நமது சாட்சிய வாழ்வு, இறைவன் மீது நமக்குள்ள எதிர்நோக்கு, இறையரசை நோக்கி நாம் காட்டும் அர்ப்பணம் என அனைத்தையுமே அது மிக துல்லியமாக குறித்து காட்டிவிடுகிறது. இன்னும் ஆழமாய் சென்று நமக்காக காத்திருக்கும் இறைவனின் பிள்ளைகள் என்ற அழியா மகிமையையும் (யோ 1:12), கிறிஸ்துவோடு பங்காளிகள் என்னும் நிலையையும் (உரோ 8:17), மாட்சிமைக்குரிய மக்கள் என்னும் எதிர்நோக்கையும் (உரோ 8:18) அது நமக்கு நினைவூட்டுகிறது. 


உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் முழு பொருளையும் நாம் உணர வேண்டும் என்றால் அதில் அடங்கியுள்ள மறைபொருளை நாம் மறந்துவிட கூடாது. மறைபொருள் என்பது ஏதோ மறைந்து கிடக்கின்ற ஒரு பொருள் என்று நாம் புரிந்துகொள்ளாது, நம்  வாழ்நாள் எல்லாம் நிறைந்து கிடக்கின்ற ஒரு உண்மை என்று நாம் உணர வேண்டும். அதை எடுத்துக்காட்டவே கிறிஸ்து தனது சீடர்களுக்கு இன்றைய அனுபவத்தை தருகிறார். வாழ்க்கை என்பது நாம் வெளித்தோற்றமாய் காண்கின்றவை மட்டுமல்ல, அதை தாண்டி உண்மையின் ஆழத்தில் பலவற்றை நம்மால் உணரமுடியும், அனுபவிக்க முடியும், பகிர முடியும், பற்றி கொள்ள முடியும் என்று நாம் உணர வேண்டும். 

கிறிஸ்துவின் உருமாற்ற நிகழ்வு இதையே சீடர்களுக்கு எடுத்து கூறியது, நமக்கும் எடுத்து கூறுகிறது. இதற்காக வெறும் கற்பனைகளிலும் இல்லாத ஒன்றை ஊகிக்கும் போக்குகளிலும் நமது வாழ்வை நாம் வீணடித்துவிட கூடாது. அன்றாட வாழ்வை முழுமையாய் வாழ்ந்து கொண்டே, இந்த வாழ்வு உண்மையில் நம்மை எங்கு அழைத்து செல்கிறது என்பதை மறந்துவிடாது எதிர்நோக்கோடும் அகன்ற பார்வையோடும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று இறைவார்த்தை நம்மை அழைக்கிறது. 

உருமாற்றத்தின் மக்கள், உள்ளதையும் அதை தாண்டிய உண்மையையும் உணர்ந்தவர்களாக, தங்கள் கண்கள் விண்ணிலும் தங்கள் கால்கள் மண்ணிலும் பதிய வாழ்பவர்களாவர். ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை முழுமையாய் வாழ்ந்து, அதை இறைவனுக்காக, இறையரசிற்காக வாழ்கிறோம் என்று உணரும்போது, நாமும் உருமாற்றத்தின் மக்களாய் உருவெடுக்கிறோம்! பொழுது புலர்ந்து விடிவெள்ளி அனைவர் இதயங்களில் தோன்றும்வரை இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்று நமது வாழ்வு என்றும் இவ்வுலகில் ஒளிரட்டும்!


Called to burn until we are consumed

August 6, 2018: The Feast of the Transfiguration of the Lord

Dan 7: 9-10, 13-14;  2 Pet 1: 16-19; Mt 17: 1-9

This is the painting on the interior of the dome of the Church on Mt. Tabor
"A lamp shining in a dark place until day dawns and the morning star rises in your hearts" - a wonderful analogy that St. Peter presents to us. It would apply to our faith, our life of witness, our trust, our commitment to the Reign of God and every bit of our faith and its expression here and now, all leading us towards that eternal glory that awaits us as children of God(Jn 1:12), co-heirs with Christ(Rom 8:17), people meant for the future glory (Rom 8:18). 

Our Christian life is rich and its richness will be lost if we lose the sense of mystery in understanding it. Mystery is not merely something that is unknown and incomprehensible, but it is something that is beyond all our rational calculations and empirical conditions; yet it is not totally alien from our experience; it is part of our lived experience, an experience we live on a daily basis, an experience that sustains our faith and offers meaning to our life.

The feast of Transfiguration is a symbol, a prefigurement and a surety of the glory that rests within us, as children of God. However, we are warned not to lose our grip on our daily living, on our concrete initiatives towards ushering in the Reign of God under the pretext of dreaming about a future that is glorious and splendid. 

In practical terms, to be people transfigured, is to live our lives with our eyes fixed on heaven and our feet planted firm on ground, to never lose the hope that the Lord offers in Himself and to never rest from our efforts to build the Reign of God here on earth. It is a call to burn until we are totally consumed, totally consumed for the sake of the mission that the Lord entrusts to us, consumed living our daily life to the full, empowering every person to live it to their full. 

Saturday, August 4, 2018

BRED FOR HEAVEN

Do not get lost...

18th Sunday in Ordinary time: 5th August, 2018
Exo 16: 2-4,12-15; Eph 4: 17, 20-24; Jn 6: 24-35




O Christian, realise your dignity: those words of Pope St. Leo the Great is something that pulls up our attention constantly towards living a life that is worthy of the splendour we are invested with. This Sunday's Word brings this back strongly to our minds. We need to remember we are not any kind of beings. Even among the so-called human beings, we have received and we claim to have accepted a revelation, very special and precious. And hence we need to remember that we are people bred for heaven! 

The Word reminds us that we are different and we need to make a difference. We need to feel the presence of the Lord who makes a difference for us! We need to start living that difference in our life, on a daily basis, by showing to the world that our value systems are different, that our priorities are different and that our foundation is different. 

We have an obligation to make a difference, wherever we are! Because we are bred for heaven! Our home is heaven, our origin is God and our destiny is eternal life! We are fed by the bread from heaven and we are bred for heaven! 

We cannot get lost in the world, in the crowd, in the so called normalcy of life. We are warned against three things in which we can possibly get lost:

Do not get lost in things that do not last. 
The world seems to be running crazy behind things that cannot last - possessions and pleasure are ranked the highest in the list of priorities in life today. The sad fact is, after all the running and an eventual achievement there is a disillusionment that follows almost immediately! We lose everything to reach where we cannot stay forever, to achieve things that would not remain with us forever, to have a feeling which would not follow us forever. Jesus gets seemingly upset with the people because they were attaching a disproportionate importance to the gross benefits of following Jesus, losing the actual and the ideal good that Jesus was proposing to them, a different way of life! The only thing that lasts, the Lord says today, is the life that God alone can give, the eternal life. 

Do no get lost with the ways of the crowd.
Do not go on living an aimless kind of life, St. Paul insists in his letter to the Ephesians! Live as people who have seen the Way, the Truth and the Life. See that difference, make that difference and live that difference. Let the world turn around and look at you, don't be following the crowd. Do not conform to the ways of the world (Rom 12:2), Paul would say elsewhere. Be singled out, by your way of life! Be noticed, by your priorities. Be imitable, by the priceless model that you have, Jesus the Lord. Be imitators of me as I am of Christ, said Paul. 

Do not get lost being carried away by the apparent.
Do not go by the external show and the make-belief practices. Do not be carried away by what appears and what is projected - they can mislead you. The people thought Moses gave them the bread from heaven. Jesus had to teach them, it was not Moses but the Father in heaven who gave them the bread and that the same bread had come down in flesh and blood amidst them. They could not see it, because they were fixated with the apparent, with the external, with the outward show. They could not delve deeper and get their faith right. Today we have come a long way, we have seen the revelation of God, the experience of God, the majesty of God...and we cannot get lost in the apparent. 

We are not meant for the passing things and temporal benefits... yes, they are necessary but there is life over and beyond them all. We are truly made for God! We are bred for heaven! Let us never lose sight of it and never stop marching towards it!

Friday, August 3, 2018

The plight of a prophet

Remembering St. John Marie Vianney

August 4, 2018: Jer 26: 1-11,16 ; Mt 14: 1-12


Constant threat to life, drastic insecurities of life, total nonacceptance from the rest of the so called normal people, pressures of helplessness...these form part of the usual plight of a prophet, not just in the days of Jeremiah and John the Baptist but even today. That explains why real prophets are a rare phenomenon. However, it has often occurred to me that, the difference between a true prophet and a self-righteous egoist is very thin and dangerously subtle.

The first element that can demarcate the two is the FOCUS. When Jeremiah spoke to the people and the princes, he never looked for support or people who can come to his defence. His focus was determinantly on what God wanted him to say and nothing else.

The second element is DETACHMENT from the result. Though the message is definitely pointed towards a change, a result,  the prophet is not excessively anxious about it. At times a self righteous person can be on a ego trip claiming credits and proving his point. A true prophet desists this tendency naturally.

The third element is absolute FEARLESSNESS. A fearlessness that makes them hard people to handle for the authorities and the hierarchy. But that fearlessness comes from their unwavering trust, confidence and hope in the never failing presence of the Lord!


We have a saint today who shines as an epitome of these qualities at any point in his life, whether at the moment when he was about to be sent out of the seminary for his dullness of intellect,  or when he was rather dumped into a 'god forsaken' village as they thought, or when the people did not even bother about the new priest at the Church, or when he had just empty pews to preach to, he never gave up!  He was always mindful of the fact that it was the Lord who had called him and sent him to that village. That faith paid off!  That village experienced a revival. He proved a true prophet!

As we resolve today to take the faith perspective of our life seriously,  let us whisper a prayer for every priest whom we know, specially for those who are in some kind of crisis. May Vianney intercede for a revival.

முழுமையான இறைவாக்கினர்களாக...

புனித ஜான் மரிய வியான்னி - நினைவு


ஆகஸ்ட் 4, 2018: எரே  26: 1-11,16 ; மத் 14: 1-12



கொலை மிரட்டல்கள், நிராகரிப்பு, ஏற்றுக்கொள்ளப்படாமை, யாருக்காக அனைத்தையும் செய்கிறோம் என்று நினைக்கிறோமோ அவர்களிடமிருந்தே வெறுப்பு - இவையே ஒரு முழுமையான இறைவாக்கினரின் வாழ்வாகும். எரேமியாவின் காலத்திலும், திருமுழுக்கு யோவானின் காலத்திலும் மட்டுமல்ல, இன்றும் இதுவே உண்மையாக இருப்பதை நாம் காணமுடிகிறது. ஆகையால் தான் உண்மையான முழுமையான இறைவாக்கினர்கள் தோன்றுவது அரிதாகின்றது. எனினும் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு உண்மை என்னவென்றால், உண்மை இறைவாக்கினர்களுக்கும், தற்பெருமை சாற்றும் போலி இறையூழியர்களுக்கும் ஒரு மெல்லிய கோடே வேறுபாடாய் என்றும் அமைந்துள்ளது! 

இந்த வேறுபாடுகளில் முதன்மையானது, நோக்கம். எதை நோக்கி நமது சொற்களும் செயல்களும் நகர்கின்றன, மற்றவர்களை நகர்த்துகின்றன என்று நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. எரேமியாவோ, யோவானோ, தாங்கள் பேசியபோது இறைவன் விரும்பியதை பேசினார்கள், யாருடைய ஆதரவையோ, அரணையோ அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

இரண்டாவதாக, விளைவின் மீது பற்றின்மை. தாங்கள் சொல்வது ஒரு விளைவை, மாற்றத்தை நோக்கி இருந்தாலும், அந்த மாற்றத்தின் அல்லது விளைவின் மீது அவர்கள் எந்த ஒரு பற்றுமின்றி இருந்தார்கள். சில நேரங்களில் இறையடியார்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், தங்கள் பெயர், புகழ், நினைவு என்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே பலவற்றை செய்வதை நாம் கண்டதுண்டு அல்லவா?

மூன்றாம் வேறுபாடு, பயமின்மை. இதுவே அவர்களை பெரும் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாற்றிவிடுகின்றது. யாருக்கும் எதற்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடிய மனநிலை என்பது கட்டுக்கடங்காத ஆற்றலை உண்மையிலேயே தரக்கூடிய குணமாகும். இந்த பயமின்மை அவர்களது தனிப்பட்ட துணிச்சலிலிருந்து வருவதல்ல. மாறாக இறைவனின் உடனிருப்பில் அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்தே பிறக்கிறது.


இம்மூன்று வேறுபாடுகளையும் தன்னகத்தே மிக ஆணித்தரகமாக கொண்ட புனிதர் ஒருவரை நாம் இன்று கொண்டாடுகின்றோம் - புனித ஜான் மரிய வியான்னி! குருவாவதற்கான பயிற்சியின் இடையில் அவரது இயலாமையை காரணம் காட்டி அவரை வெளியேற்ற சிலர் நினைத்த போதும் சரி, யாரும் கேள்விப்படாத குக்கிராமமமான ஆர்ஸ் என்னும் ஊருக்கு அவரை கண்காணா இடத்திற்கு அனுப்புவதாய் நினைத்து அனுப்பிய போதும் சரி, புதிதாய் வந்துள்ள குரு யாரென்று கூட கவலைப்படாத மக்களாய் தன் பங்கு மக்கள் இருந்தபோதும் சரி, யாருமற்ற வெறும் இருக்கைகளுக்கு மறையுரை ஆற்றவேண்டிய நிலை வந்தபோதும் சரி, ஜான் வியான்னி மனமுடையவில்லை, நிலைகுலையவில்லை. அவரது நம்பிக்கை நிலையாயிருந்தது, அந்த ஊரை மட்டுமல்ல, சுற்றியுள்ள அனைத்து மக்களையும் மனமாற்றியது! இதுவே உண்மையான இறைவாக்கினருக்கு அடையாளம்!

அதே நம்பிக்கையோடு வாழமுடிவெடுக்கும் நாம், இன்று நமக்கு தெரிந்த அனைத்து குருவானவர்களுக்காகவும் ஒரு சிறு செபத்தை ஏறெடுப்போம் ... சிறப்பாக பிரச்சனைகளில் இருக்கும் குருவானவர்கள், நம்பிக்கையில் தளர்ந்துள்ள குருவானவர்கள், இடறல்களில் சிக்கியுள்ள குருவானவர்களை இறைப்பதம் சரணாக்கி செபிப்போம்!